முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் இன்று மட்டும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் 3 மணிவரை திறந்திருக்க அனுமதி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதால் பொதுமக்களின் வசதிக்காக, இன்று(25.04.2020) மட்டும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் பிற்பகல் 3 மணி மணி திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை: பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்..!
பொதுமக்கள் பொருட்களை வாங்கச்செல்லும்போது தனிமனித இடைவெளியை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.