கொரோனா காரணமாக மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக தற்போது நாடே முடக்கத்தில் உள்ளது. அதனால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிக்கையும் வெளியிட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், முக்கிய நிகழ்வான மண்டூக ரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.