கொரோனா சூழலில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றியும் அன்பும் தெரிவிக்கும் வகையில் #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்கில் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனைப் போலவே நிவின் பாலி போன்ற பல பிரபலங்களும் இந்த இக்கட்டான சூழலில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
க்வாரன்டீன் தொலைக்காட்சிகள் நாஸ்டால்ஜியா நிகழ்ச்சிகள், சீரியல்களைத் திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருப்பதைப் போலவே, பல பிரபலங்களும் தங்களது நாஸ்டால்ஜியா புகைப்படங்களை சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் குஷ்பு, சாய்பல்லவி, பார்வதி ஆகியோர் தங்களது சிறுவயது புகைப்படங்களைப் பகிர்ந்து தங்கள் நினைவுகளைச் சொல்ல, ஹார்ட்டின்களைத் தருகின்றனர் ரசிகர்கள்!
கடந்த சில நாள்களாக டோலிவுட் செலிப்ரிட்டிகள் #BeTheRealManChallenge என்ற ஹேஷ்டேக்கில் ஒருவரை ஒருவர் டேக் செய்து வருகின்றனர். இந்த லாக் டௌன் சூழலில் வீட்டுக்குள் எந்த மாதிரியான உதவிகளைச் செய்து வருகின்றனர் என்பதை வீடியோவாக இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட வேண்டும்.
ராஜமெளலி, வெங்கடேஷ், ஜூனியர் என்.டி.ஆர் எனப் பலரும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட, சிரஞ்சீவி தனது வீட்டில் அம்மாவுக்கு தோசை செய்து தரும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த சேலஞ்சில் பங்கேற்கும்படி மணிரத்னத்தையும் ரஜினிகாந்த்தையும் டேக் செய்துவிட சவாலை இருவரும் ஏற்பார்களா என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
திரைப்பட விருது விழாவில், `கோயில்களைப் போலவே மருத்துவமனைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செலவு செய்து பராமரியுங்கள்’ என நடிகை ஜோதிகா பேசியதற்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில் அதற்கு இணையாக சர்ச்சையும் கிளம்பியது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்களையும், ஜோதிகா எதற்காக அவ்வாறு பேசினார் என்பதயும் இயக்குநர் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் வெளிவரவும், நிலைமைய சமாளிக்கவும் அரசுக்கு நன்கொடை அளிக்கலாம் என மத்திய மாநில அரசுகள் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், மக்கள் என அனைவரும் தங்களால் இயன்ற அளவிலான நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர். தமிழ்த்திரையுலக பிரபலங்களும் மத்திய மாநில அரசுக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் மத்திய மாநில அரசுகள், ஃபெஃப்சி அமைப்புகளுக்கு வழங்கியது மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகளின் கொரோனா சார்ந்த பணிகளுக்கும் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா சூழல் குறித்தும், மக்கள் பாதுகாப்பு குறித்தும் உரையாடியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பிடித்த நட்சத்திர ஜோடியில் அஜித்-ஷாலினி இணையருக்கு எப்போதுமே ஸ்பெஷல் இடம் உண்டு. `அமர்க்களம்’ படத்தில் தொடங்கிய காதல் திருமணத்தில் முடிந்து இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன.
அஜித்-ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள் #ShaliniAjith என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் வாழ்த்துகளைப் பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர். இந்த ஹேஷ்டேக்கில் தங்கள் வாழ்த்துகளோடு, அஜித்-ஷாலினியின் திருமண புகைப்படங்கள், செய்த்தித்தாளில் வந்த திருமண அறிவிப்பு குறித்தான செய்தி எனப் பல அரிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.