கேரளாவில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 ஆயிரத்து 427 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக குஜராத்தில் 2407 பேரும், டெல்லியில் 2248 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 148 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் 686 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4325 பேர், குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

image

இந்நிலையில், கேரளாவில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மலப்புரத்தைச் சேர்ந்த அக்குழந்தைக்கு இதய நோயால் பாதிக்கப்பட்டு 3 மாதமாக சிகிச்சை எடுத்து வந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவும் பாதிக்கப்பட்ட நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் இன்று காலை குழந்தை உயிரிழந்தது. கேரளாவில் இதுவரை 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 23ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

“ரேபிட் டெஸ்ட் கொரோனாவை உறுதி செய்யாது” – இந்திய மருத்துவ கவுன்சில்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.