அரியலூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பிய நிலையில், அவர் கொரோனாவில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பது குறித்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

image

சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் பணி செய்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், அவர் தனது சொந்த ஊரான அரியலூரில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக குணமடைந்த அவர், வீடு திரும்பியுள்ளார். முன்னதாக, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பழங்கள் வழங்கி, கைதட்டி அந்த பெண்ணை வழி அனுப்பி வைத்தனர்.

image

இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும்போது , பொழுது போக்குக்காக தான் செய்த படம் வரைதல், கவிதை எழுதுதல் உள்ளிட்டவற்றை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்கும் போது , எவ்வாறு நேரத்தை செலவிடலாம் என்பது குறித்தும், தான் உட்கொண்ட உணவுகள் குறித்தும் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். குறிப்பாக தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை வித்தியாசமான முறையில் கையாளும் துருக்கி…!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.