இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க இயலாது என மத்திய அரசு சென்னை உயர்
நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் சடங்கு – ஊரடங்கை மீறியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு
கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் பல நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்றவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு செல்வதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மலேசியாவில் சிக்கியுள்ள 350-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அங்கு
சிக்கியுள்ளவர்களில் ஒருவரான முல்லைநாதன் என்பவர் சார்பாக வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
உடல்நிலை சரியில்லாத வீரரைக் காண 2,700 கி.மீட்டர் பயணித்த தாய் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வெளியுறவுத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், வெளிநாட்டில்
சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகிவிடும் எனவும், ஊரடங்கு சமயத்தில் வெளிநாட்டில் தங்கி
உள்ளவர்களை இந்தியா கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், சிறப்பு விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை சொந்த நாடு திரும்ப மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ளது போல, இந்திய அரசு நடவடிக்கை
எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.