ஒரேநாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.

image

உலகிலேயே ஒரேநாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்த நாடாகி இருக்கிறது அமெரிக்கா. அங்கு 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோன தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 700யை கடந்துவிட்டது. அதிகபட்சமாக நியூயார்க்கில் 7840க்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மதுரையில் இன்று மீன், இறைச்சிக் கடைகள் திறக்க தடை

image

“அடுத்தாண்டும் ஒலிம்பிக் நடைபெறுவதில் சந்தேகம்” நிர்வாகி தகவல் !

அங்கு ஒருலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக நியூஜெர்சியில் 54 ஆயிரத்து 588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1930-க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாட்டில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், நியூ ஆர்லியன்ஸ், லுசியானா, டெட்ராய்ட், மிச்சிகன் மாநிலங்களில் பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். தனிமனித இடைவெளியும், வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதும் நல்ல பலனை தருவதாக கூறினார். இதேநிலை நீடித்தால், உயிரிழப்பை ஒருலட்சத்திற்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.