இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், வாழ்வாதாரத்தை இழந்திருப்பவர்களுக்கும் இதே அளவிலான தொகை கைகளில் கிடைப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விசயத்தில் அரசு தைரியமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு 65 ஆயிரம் கோடிதான் செலவாகும் என்று குறிப்பிட்டிருக்கும் சிதம்பரம், இது பொருளாதார ரீதியாக சாத்தியமானதுதான் எனவும் கூறியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா
ரூ 5000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.— P. Chidambaram (@PChidambaram_IN) April 11, 2020
ஏழைகள் வேலைகளை இழந்து உணவுக்காக வரிசையில் கை ஏந்தி காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார். மாநில முதலமைச்சர்களுடன் நேற்று காணொலி மூலம் உரையாடியபோது, உயிர்களும் வாழ்வாதாரமும் முக்கியம் என பிரதமர் கூறியதை வரவேற்பதாக சிதம்பரம் குறிப்பிட்டார்.
‘என் தாயை காப்பாற்றுங்கள்’ டிக்டாக்கில் அழுதபடி உதவி கேட்ட இளம் பெண்..வைரலான வீடியோ