(கோப்பு புகைப்படம்)

ஈரோடு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெருந்துறையை சேர்ந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

image

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 911 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஊரடங்கு விதி முறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கோவை: கொட்டகை அமைத்து கூட்டம் கூடி தொழுகையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு

 

image

ஊரடங்கை நீட்டிப்பதா?: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த 8 ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெருந்துறையை சேர்ந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே சர்க்கரை, மூளை நரம்பு பாதிப்பு போன்ற வியாதிகள் இருந்ததாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இறந்த முதியவருக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை. இவரது உயிரிழப்பை தொடர்ந்து பெருந்துறையில் இவர் வசித்த பகுதியை சுற்றி 1கி.மீ சுற்றுக்கு வீதிகளை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.