டெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, மருந்து, பால் ஆகியவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
பாபி சவுத்ரி என்ற பால்காரர் தன்னுடைய உறவினரின் திருமண பார்ட்டியில் குடிப்பதற்காக மதுபானத்தை பால் கேனுக்குள் கடத்தி
வந்துள்ளார். அத்தியாவசியத் தேவையாக பால் இருப்பதால் போலீசார் கண்டுகொள்ள மாட்டார்கள் என திட்டமிட்ட பாபி, 7 பாட்டில்களை பால் கேனுக்குள் மறைத்து கொண்டு சென்றுள்ளார். நள்ளிரவில் சோதனைக்காக போலீசார் நிறுத்தியுள்ளனர்.
ஆனால் பாபி நிற்காமல் தப்பித்து சென்றுள்ளார். பாபியை துரத்திப் பிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் பாபிக்கு மதுபானம்
எங்கு கிடைத்தது என்பது குறித்தும் சட்ட விரோதமாக விற்பனை நடைபெறுவது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களை நோக்கி துப்பினால் கொலைமுயற்சி வழக்கு