கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு
மாற்றப்பட்டுள்ளார்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் முக்கியத்
தலைவர்களுக்கும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்த்துகிறது. இங்கிலாந்து
பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்தார். இதனால் அவர் தன் வீட்டிலேயே தன்னை 10 நாட்களுக்கும்
மேலாக தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமரின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இல்லாததால் தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே போரிஸ் விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்வதாக பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும்,
இங்கிலாந்து மக்களும் தெரிவித்துள்ளனர்.
அறிகுறிகளே இல்லை : கேரளாவில் 19 நாட்களுக்குப்பின் மாணவிக்கு உறுதியான கொரோனா