கொரோனா வைரஸ் பரவிய நாளில் இருந்து முதல் முறையாக கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை என சீன அரசு ஆறுதலான தகவலை வெளியிட்டிருக்கிறது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச அளவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் நோய் பரவலை தடுக்க சீனா கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்ததால், அந்நாட்டில் மட்டும் தற்போது உயிரிழப்பு கட்டுக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா
இந்தச் சூழலில், வைரஸ் பரவிய நாளில் இருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற ஆறுதலான செய்தியை சீன சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” – தெலங்கானா முதல்வர் கோரிக்கை
முதல் கட்ட வைரஸ் பரவலை சீனா தடுத்துவிட்டாலும், வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களால், வைரஸ் பரவலை அந்நாடு சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.