நாட்டில் நிலைமை சரியாகும் வரை மாதம் மாதம் தனது ஊதியத்தில் 30 சதவிகித தொகையை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கியுள்ளன. முன்னதாக அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நேரமானது 2.30 மணி வரையாக இருந்தது. இதனையடுத்து இந்த நேரமானது தற்போது 1 மணி வரையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” – தெலங்கானா முதல்வர் கோரிக்கை

image

 

இந்நிலையில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி கொரோனாவை எதிர்த்து போராடுவதற்காக மக்கள் தங்களால் ஆன உதவியை அளிக்குமாறு மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது. இதற்காக “PM CARE FUND” என்ற வங்கி கணக்கு திறக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா நிவாரண நிதியை மக்கள் அதில் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கொரோனா நிவாரண நிதி வழங்க முன்வந்துள்ளார்.

image

கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு முதல் ஊரடங்கு கட்டுப்பாடு குறித்த ஆலோசனை வரை..!

இது குறித்து அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடும்போது “இந்தியாவில் நிலைமை சரியாகும் வரை மாதம் மாதம் எனது 30 சதவீத சம்பளத்தை பிடித்துக் கொள்ளும்படி கேட்டுகொள்கிறேன். அதன்படி மாதத்திற்கு 1 லட்சத்தி 5,000 ரூபாய் எனது கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகையானது பிரதமரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.