கொரோனா எதிரொலியாகப் பிரதமர் உள்பட எம்பிக்களின் சம்பளத்தில் 30 சதவிதம் குறைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலைத் தெரிவித்தார்
 
குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர்கள் ஆகியோரின் சம்பளத்திலும் 30 சதவிதம் பிடிக்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்பிக்களின் சம்பளத்திலும் 30 சதவிதம் பிடிக்கப்படும். சம்பளக் குறைப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
 
 
சம்பள குறைப்பு ஓராண்டுக்கு இருக்கும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அத்துடன், எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என்று அவர் கூறினார். சம்பள குறைப்பு, தொகுதி நிதி நிறுத்தம் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு ரூ7900 கோடி மிச்சமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.