ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாகவே சென்னையின் காற்று மாசு கணிசமான அளவிற்கு குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு நிலையில் இருந்து தள்ளி இருக்கின்றன. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் இல்லை. பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மனிதர்கள் கூட்டம் நிரம்பி வழியும் பல இடங்கள் இன்று வெறிச்சோடி இருக்கின்றன.

image

வாகன புகை, தொழிற்சாலை புகை என காற்று மாசால் நிரம்பும் இந்தியா தற்போது தூய்மையான காற்றை வீசிக்கொண்டு இருக்கிறது. அதிக காற்று மாசு உள்ள நகரங்கள் எனக் கூறப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று தரமான காற்றுள்ள நகரம் என்ற தரக்குறியீட்டை பெற்றிருக்கின்றன. காற்று மாசு குறைந்ததால் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இமயமலையின் ஒரு பகுதியாக இருக்கும் தால் ஆதர் மலையை கண்டு ரசித்தார்கள்.

image

காற்று மாசு குறியீட்டு எண் என்பது காற்றில் உள்ள கந்தக டை ஆக்சைடு நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு ஆகிய மாசுகளின் கணக்கீட்டு தொகுப்பாகும். புகை அதிகமானால் இதன் அளவும் அதிகரித்துவிடும். அப்படியானால் காற்றின் தூய்மை குறைந்துவிடும். சென்னையைப் பொருத்தவரை சராசரியாக காற்று மாசு குறியீடு எண் 100 லிருந்து 200 வரை இருக்கும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிகளில் அதிக புகை காரணமாக காற்று மாசு குறியீடு எண் 300வரை செல்லும். ஆனால் தற்போது சென்னையில் காற்று மாசு குறியீடு எண் 48ஆக உள்ளது.

image

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாகவே சென்னையின் காற்று மாசு கணிசமான அளவிற்கு குறைந்திருக்கும் நிலையில்
இன்றைய பகல் 11 மணி நிலவரப்படி குறியீடு எண் 48ஆக உள்ளது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது தற்போது சென்னையில் இருப்பது சுவாசிக்க தகுந்த சுத்தமான காற்று என்கின்றனர் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

அரியலூர்: அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடுவதை தடுக்க வண்ண அட்டைகள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.