சென்னையில் வரும் திங்கள்கிழமை மட்டும் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மஹாவீர் ஜெயந்தியையொட்டி வரும் திங்கள்கிழமை இறைச்சிக் கடைகளை திறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்” – காவல்துறையில் ஈஷா புகார்
முன்னதாக சென்னையில் இறைச்சிக் கடைகளை ஏப்ரல் 14-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் திங்கள்கிழமை மட்டும்தான் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் குவிந்ததால், இவ்வாரம் இறைச்சிக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட் இன்று முதல் 14 தேதி வரை இயங்காது என மீன் வியாபாரி சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை மறைக்கிறதா சீனா?
மேலும் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளிவருவோரைத் தடுக்க 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.