இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,547 ஆகஅதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,547 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது.

image

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் அகர்வால், ஒரே ஒரு நிகழ்வை தவிர்த்துவிட்டு பார்த்தால் நாட்டில் கொரோனா பரவல் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், அறிகுறி உள்ளோருக்கு அதிவிரைவாக சோதனை நடத்தி முடிவுகளை அறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

image

இதற்கிடையில் கொரோனா பரிசோதனைகளுக்காக 130 அரசு ஆய்வகங்கள் உட்பட நாடெங்கும் மொத்தம் 182 ஆய்வகங்கள் இயங்கி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியது.

“நாம் என்றோ கையில் எடுத்த டார்ச் லைட்” – பிரதமர் பேச்சை விமர்சித்த கமல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.