பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொரோனா மூலம் ஏற்பட்ட இளம் வயது உயிரிழப்பு இதுவாகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5000க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக வைரஸ் உருவான சீனாவை விட அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வைரஸ் தொற்றின் மையாக மாறியுள்ளது.
கொரோனா தொற்றால் இரண்டு லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தி அமெரிக்க மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. மிகவும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் அமெரிக்காவிற்கு அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் வலி மிகுந்தவையாக இருக்கும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது. கொரோனா மூலம் ஏற்பட்ட இளம் வயது உயிரிழப்பு இதுவாகும். இது குறித்து தெரிவித்துள்ள ஆளுநர் லாமொண்ட், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதன் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது மனதை உருக்குகிறது. இதுவரை கேள்விப்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் இது மிகவும் இளம் வயது உயிரிழப்பு என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தார் இங்கிலாந்து இளவரசர்..!