யார் தொலைவாக சிக்ஸ் அடிப்பது என சவாலுக்கு அழைத்த ரிஷாப் பண்ட்-ஐ ரோகித் ஷர்மா கிண்டலடித்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்பவர் ரோகித் ஷர்மா. இவர் இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார். எப்போதும் பேட்டிங்கில் களமிறங்கினாலும் தொடக்கத்தில் பொறுமையாக ஆடும் ரோகித், 25 பந்துகளை கடந்த பின்னர் அதிரடியை தொடங்கிவிடுவார்.

image

பின்னர் இவரது பேட்டிங்கை எதிரணியின் பவுலர்கள் சமாளிப்பது கடினம். குறிப்பாக சில நேரங்களில் பந்துகளை வானத்தில் உயரமாக பறக்கவிட்டு சிக்ஸர் அடிப்பார். 50 ரன்களை கடந்துவிட்டால் சிங்கிள் போல சிக்ஸர் அடிப்பவர். இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரரான ரிஷாப் பண்ட், ரோகித்துக்கு சவால் விட்டு பல்பு (சொதப்பல்) வாங்கியுள்ளார்.

image

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனது இன்ஸ்டாகிராம் லைவ்-ல் ரோகித்திடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதில், “ரிஷாப் பண்ட் உங்களை நீண்ட தூர சிக்ஸ் சேலஞ்சுக்கு அழைத்துள்ளாரே?” எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரோகித், “ரிஷாப் என்னை சவாலுக்கு அழைக்கிறாரா ? அவர் சர்வதேச கிரிக்கெட்டை ஒரு வருடம் தான் விளையாடியிருக்கிறார். ஆனால் அதற்குL என்னை போட்டிக்கு அழைக்கிறார்” என கிண்டலாக கூறியிருந்தார். இதையடுத்து ரிஷாப் பண்ட்-ஐ நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.

“நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுகிறேன்” : பிரதமர் மோடி

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 346 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா 423 சிக்ஸர்களை அடித்துள்ளார். 56 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷாப் பண்ட் 47 சிக்ஸர்களை அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.