ஐக்கிய அரபு அமீரகத்தில் ஊரடங்கு நேரத்தின்போது அத்தியாவசிய காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் , இந்திய மதிப்பில் 76 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

image

“ஹஜ் பயணத்தை ஒத்திவையுங்கள்”- சவுதி அரசு வேண்டுகோள் ! 

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். 814 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை அமீரகத்தில் 61 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்பும் நோக்கத்துடன் வைரஸ் அறிகுறிகளுடன் வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் , இந்திய மதிப்பில் 76 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

image

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் குறித்து தெரிந்தும், அரசிடம் தகவல் தெரிவிக்காமல் இருப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறையும் சுமார் 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் மெக்காவில் நோய் தொற்று பரவுவதை தடுக்க சவுதி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

image

சவுதியில் கொரோனாவால் இரண்டாவது உயிரிழப்பு: ரியாத், மெக்கா, மதினா நகரங்களுக்கு ‘சீல்’ 

மக்கள் அதிக அளவில் கூடினால், கொரோனா எளிதில் பரவக்கூடும் என்பதால், கடந்த மாதம் உம்ரா பயணத்தை சவுதி அரசு ரத்து செய்தது. இந்நிலையில், ஹஜ் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டின் அமைச்சர் முகமது பென்டன் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், அதனை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் முகமது பென்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.