சத்தியமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த 3 வயதுள்ள ஆண் சிறுத்தையை காவல் துறையினர் மீட்டெடுத்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த புதுக்குய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். வனத்தையொட்டியுள்ள இவரது தோட்டத்தில் 15 அடி அளவு தண்ணீருடன் 50 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணறு ஒன்று உள்ளது. இது மட்டுமல்லாமல் இவர் தோட்டத்தில் மாட்டுக்கொட்டகை ஒன்றை அமைத்து அதில் ஆடு மாடுகளையும் பராமரித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் அவர் விவசாயப்பணியில் ஈடுபட்டிக்கொண்டிருந்த போது கிணற்றில் இருந்து உறுமல் சப்தம் கேட்டுள்ளது.
சிக்கல் இல்லாதவர்கள் கபசுர குடிநீரை குடித்தால் பிரச்னையா? – எச்சரிக்கும் சித்த மருத்துவர்
தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி – பாதிப்பு 234 ஆக உயர்வு
இந்தச் சத்தத்தைக் கேட்ட சண்முகம் கிணற்றின் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் சிறுத்தை ஒன்று தண்ணீரில் தத்தளிப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கால் நடை மருத்துவர் அசோகன் மற்றும் வனத்துறையினர் கிணற்றில் விழுந்த சிறுத்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, வலையின் உதவியோடு மீட்டெடுத்தனர். அதன் பின்னர் சிறுத்தையானது பாதுகாப்பாக காட்டில் விடப்பட்டது.