தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்தது என்றும், டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

கொரோனா

தமிழகம் திரும்பிய 515 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளோம். மீதமுள்ள நபர்களின் தொலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் தயவுசெய்து சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள். தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் நேற்று வலியுறுத்தியிருந்தார். இந்த தகவல் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ், தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பேசுவதற்கு முன்பாக, டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிததார். காரணம் நேற்று அவர் பேட்டியைப் பார்த்த பின் டெல்லி கூட்டத்துக்குச் சென்றவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொண்டனர். இதனைக் கூறி அவர்களுக்கு நன்றி சொன்னவர், “தமிழகத்தில் இன்று மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 110 பேரும் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள். மேலும் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளனர். நேற்று நாங்கள் சொன்ன உடனேயே வர அவர்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

எங்கள் வேண்டுகோளை ஏற்று வந்தவர்களுக்கு நன்றி சொல்லிகொள்கிறேன். வந்தவர்கள் அனைவருக்கும் இரவு பகலாக டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 658 பேருக்கு சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு சாம்பிள் எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல வேளை டெல்லி திரும்பிய பின் இவர்களில் பெரும்பாலோனோர்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களது டிராக் ஹிஸ்டரி சேகரிக்கப்பட்டு வருகிறது.

நிஜாமுதீன் ஜமாத்

தனி டீம் அமைத்து இவர்களது டிராக் ஹிஸ்டரி சேமிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் எதில் பயணம் செய்தார்கள். அவர்களுடன் பயணம் செய்தவர்கள் யார். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள், அனைவரும் எங்கு சென்றார்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு அறிகுறிகள் இருக்கிறதா என்பது போன்ற எல்லா விவரங்களையும் இந்த டீம் சேகரிக்கும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரியதாக இருப்பதால், இதற்கு சிறிது நேரம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் முழு தமிழக அரசு இயந்திரமும் கூடுதல் நேரத்தில் வேலை செய்கின்றன. எனினும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் வரை சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் அங்கேயே 400 பேர் தங்கி இருந்துள்ளனர். தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு பரவியிருந்த கொரோனா, இன்றைய நிலவரப்படி மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவி 19 ஆக உயர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.