1,82,815 வீடுகளில் 6,88,473 பேரிடம் ஆய்வு!

தமிழகத்தில் தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட்டம் 16 மாவட்டங்களில் 3,698 களப்பணியாளர்கள் மூலம் 1,82,815 வீடுகளில் 6,88,473 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக இருக்கிறது. ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: கொரோனா ஊரடங்கு: குடிநோயாளிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழக அரசு?

குறையாத கொரோனா வீரியம்!

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனாவின் வீரியம் சற்றும் குறைந்தபாடில்லை. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 42,000-த்தைக் கடந்துவிட்டது. தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 1,78,101 பேர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 6,05,710 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. 32,898 பேரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அறிகுறி இருப்பவர்கள் தயங்காமல் மருத்துவ பரிசோதனை செய்ய முன்வர வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.