ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைப்பு!
ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட ஒரு நாடு ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
மறுக்கும் மத்திய அமைச்சரவை
கொரோனா வைரஸைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நன்மைகள் கிடைக்கும் என்றாலும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 14-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, மேலும் நீட்டிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்தத் தகவலை மத்தியரசு மறுத்துள்ளது. தற்போது அந்தத் தேதிய நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சரவை தெரிவித்ததாக பிரசார் பாரதி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. போலியான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.