நடிகர் கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது.

கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள நபர்களின் வீடுகளைக் கண்டறிந்து அரசு தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, கொரோனாவிலிருந்து எங்களை, சென்னையைக் காக்க வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என நோட்டீஸ்
ஒட்டப்பட்டது.

      image

இதனையடுத்து, இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தரப்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கொரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கமல்ஹாசனிடமே தெரிவிக்காமல் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாக முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், நோட்டீஸ் பற்றிக் கேட்டதற்குச் சரியான முகவரியில்தான் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாக அவர் தெரிவித்தார்.

      image

இந்நிலையில், கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “கமலின் பழைய முகவரி எனத் தெரியாமல் பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு நோட்டீஸ் ஒட்டினர். முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருக்கலாம். கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதில் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது” என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.