முதியவரை கட்டி வைத்து அடித்தே கொன்ற கொடூரம்: ஒடிசாவில் பயங்கரம்!
மனிதாபிமானத்தோடு நடக்கும் செயல்கள் தொடர்பான காட்சிகள், போட்டோக்கள் சமூக வலைதளங்களில் காணக் கிடைத்தாலும் இரக்கமின்றி மனிதர்களை மனிதர்களே சரமாரியாக தாக்கும் வீடியோக்கள் பல தினந்தோறும் கண்ணில் அகப்பட்டு விடுகின்றன. அதுபோல, எள்ளளவும் கருணையில்லாமல் முதியவர் ஒருவரை கட்டி வைத்து அடித்தேக் கொன்ற சம்பவம் குறித்துதான் பார்க்கப் போகிறோம். ஒடிசா மாநிலத்தில் கொராபுத் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மலைக் கிராமத்தில்தான் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கும் வீடியோவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை மின்சார கம்பத்தில்…