நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை!
சங்கரன்கோவில் அருகே சாதிய முன்விரோதம் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் அருகில் உள்ள கிராமம் உடப்பன் குளம். இங்கு கடந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குற்றம் …