கடலூர் மாவட்டம் பெருமாள் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார்(20). இவர் கடந்த 20 நாள்களாக குன்றத்தூரில் தங்கி திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் பிரவீன் குமார் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆசிட் நிரப்பப்பட்ட தொட்டியில் இருந்த மோட்டார் இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதைச் சரி செய்ய ஆசிட் தொட்டியின் மீது பிரவீன்குமார் ஏறியிருக்கிறார். அப்போது , பிரவீன் குமார் தவறி ஆசிட் நிரம்பிய தொட்டியில் விழுந்தார். அதனால் அவர் அலறி துடித்தார்.

சடலம்

சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர் 98 சதவீதம் தீக்காயம் அடைந்த பிரவீன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கம்பெனி ஊழியர்கள், மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.