எக்ஸ் தளத்தை வாங்கியது முதல் பல்வேறு மாற்றாங்களை ஏற்படுத்தி வருகிறார் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட சில அம்சங்களை பயன்படுத்த பயனர்களிடத்தில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை எலான் மஸ்க் ஏற்கனவே கொண்டு வந்திருந்தார். இந்தச் சூழலில், எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து எலன் மஸ்க் எக்ஸ் தளத்தில் விரிவான ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ்

“எக்ஸ் தளத்தில் உள்ள போலி கணக்குகளை நிரந்தரமாக தடுக்கும் வகையிலும் பாட்களை கட்டுபடுத்தும் நோக்கத்தோடு இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளதாகவும், எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்த வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் CAPTCHA போன்ற நடைமுறைகளை பாட்கள் எளிமையாக கடந்துவிடுகின்றன. இதனால், புதிதாக இணையும் பயனர்களிடம் போஸ்ட் பதிவிட மற்றும் மற்றவர்களுடன் உரையாட கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. புதிதாக இணையும் பயனர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும், அதேநேரம் மூன்று மாதங்களுக்கு பின்னர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை” என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதே மாதிரியான கட்டண நடைமுறை சோதனை அடிப்படையில் நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நீலக்குறி பெறாத பயனர்களிடத்தில் ஆண்டுக் கட்டணமாக 1 டாலர் வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய பயனர்கள் பதிவிடுவதற்கான கட்டண வசூல் நடைமுறை எப்போது செயல்படுத்தப்படும் அதற்கான கட்டணம் குறித்த விவரம் போன்றவை இன்னும் வெளியாகவில்லை.

எக்ஸ் தளம்

நடப்பு மாத தொடக்கத்தில், எக்ஸ் தளம் ஸ்பேம் கணக்குகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடபோவதாகவும், இதனால் தங்கள் பயனர்களின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்த நிலையில், தற்போது, புதிய பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கொன்டுவந்திருப்பது பயனர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.