நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கருதத்துகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. கர்நாடகாவின் தெற்கு தாவங்கரே சட்டமன்ற தொகுதியில் ஐந்தாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் சிவசங்கரப்பா. 92 வயதாகும் இவர் காங்கிரஸின் முக்கியமான முகமாக உள்ளார்.
தாவங்கரே நாடாளுமன்றத் தொகுதியில் அவரது மருமகள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஒன்றில், தாவங்கரே நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் காயத்திரி சித்தேஷ்வராவைப் பற்றி சர்ச்சையான கருத்துக்களைக் கூறியுள்ளார்.
“அவர் இந்த தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் தாமரைப் பூவை பிரதமர் மோடி கையில் அளிக்க விரும்புகிறார். ஆனால் அவர்கள் தாவங்கரே தொகுதியின் பிரச்னைகளைப் பற்றி கருத்தில் கொள்வதில்லை. நாம் இந்த தொகுதியில் பல்வேறு முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் அவருக்குச் சமையலறையில் சமைக்க மட்டும் தான் தெரியும். அவர்களுக்கு மக்களிடம் பேச கூட தைரியமில்லை” என்றார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக வேட்பாளர் காயத்திரி, “எங்களுக்கு சமையலறையில் சமைக்க மட்டும் தான் தெரியும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பெண்கள் இல்லாத வேலை என்ன இருக்கிறது என்றாவது அவருக்குத் தெரியுமா? நாங்கள் வானத்திலும் பறந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த வயதான மனிதர் பெண்கள் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதையும், கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவுமே நாங்கள் அன்போடு சமைக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டார்” என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ வின் கருத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY