கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகள் 10.6 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு தள்ளுபடி செய்த இந்த 10.6 லட்சம் கோடி ரூபாயில் 50 சதவிகித கடன்கள் பெரும் தொழில் குழுமங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலின்படி, வாராக் கடன் விவகாரங்களில் கடன் தொகையை மீட்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கும்போது அந்த கடன்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் சொத்து புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும். எனினும், இந்த கடன் தொகையை மீட்பதற்கு வங்கி தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.