வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் போது லட்சுமி பூஜையில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இரவு நேரத்தில் இப்பூஜை நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிர்மல் சுகந்தா என்பவர் தனது வீட்டில் நடந்த பூஜையில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை வைத்து தனது குடும்பத்தோடு பூஜை செய்தார். நிர்மல் மளிகைக்கடை வைத்திருக்கிறார். கடையில் பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை செய்ய இரவு அதிக நேரம் ஆகிவிட்டது. அதிகாலை ஐந்து மணி வரை இந்த பூஜை நடந்தது. காலையில் பூஜைக்கு பிறகு வீட்டிற்கு லட்சுமி வருவார் என்று என்ற நம்பிக்கையில் கதவை திறந்து வைத்திருந்தனர்.

திருட்டு, கொள்ளை

இரவு முழுவதும் விழித்து இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அசதியில் உறங்கிவிட்டனர். பூஜையில் 80 ஆயிரம் பணம், 3 வெள்ளி சிலைகள், 9 சிறிய தங்க பிஸ்கட்கள், வெள்ளி நாணயம் போன்றவை இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சமாகும். அதிகாலை வீட்டிற்கு வந்த திருடர்கள் பூஜை அறையில் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டனர். அதோடு வீட்டில் இருந்த மொபைல் போனையும் எடுத்துச்சென்றனர். காலையில் வீட்டு வேலைக்கார பெண் வந்து பார்த்த போது அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்களை எழுப்பியபோதுதான் பூஜையில் இருந்த அனைத்தும் திருட்டு போனது தெரிய வந்தது. உடனே இது குறித்து நிர்மல் போலீஸில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகள் நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு ஆட்டோ ஒன்றில் தப்பிச்சென்று இருந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.