சென்னை, திருப்பூர், புதுச்சேரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
தமிழகத்தில் சென்னை, திருப்பூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இதில் சென்னையில் நடைபெற்ற சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர்,அருள்புரம், சின்னக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வரும் முகவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து திருப்பூருக்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்படும் நபர்கள் உள்ளார்களா? அங்கிருந்து அழைத்து வரப்படும் நபர்களுக்கு போலி ஆதார் அட்டை தயார் செய்து பணியில் அமர்த்தபடுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காலை முதலே திருப்பூரில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஐ.ஏ சோதனை
திருப்பூர், சென்னையை தொடர்ந்து, புதுச்சேரி 100 அடி சாலை எல்லைபிள்ளை சாவடி பகுதியில் உள்ள ஒரு குடோனில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மூன்று பேர் புதுச்சேரி போலீஸார் உதவியுடன் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.