லோக சுபீட்சத்துக்காகவும் வாசகர்களின் குடும்ப நலனுக்காகவும் 13-10-23 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் ஆவடி ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது.
ஆவடியில் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறாள் ஶ்ரீதேவி கருமாரி அம்மன். மண்ணுலக மக்களைக் காக்க வந்த ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆவடியில் இத்தலத்தில் நடத்திய லீலைகள் அநேகம். இன்றும் இங்கு வந்து வணங்கும் பெண்களின் துயர்களைத் தீர்க்கும் அன்னையாக விளங்கி வருகிறாள் இந்த கருமாரியம்மன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே இங்கு கோயில் கொண்ட இந்த அம்மன், அப்போது இங்கு பரவிய கொடிய நோய்களையும் துஷ்ட சக்திகளையும் விரட்டி இங்கு காவல் புரிந்தவளாம்.
‘பக்தர்களை தன் கண்ணில் வைத்துக் காக்கும் தாய் இவள்’ என்று பக்தர்கள் இவளை வியந்து போற்றுகிறார்கள். பெருமைமிக்க இந்த மஹாசக்தி ஆலயத்தில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள மங்கல வாழ்வு, செல்வவளம், சுக்கிர யோகம், நாகதோஷ நிவர்த்தி, ஆரோக்கியம் யாவும் கிட்டும். ஆயுள் பலத்தை அதிகரிக்கும் இந்த ஆலயத்தில் திருவிளக்கு பூஜை எனும் அற்புதமான வழிபாட்டில் நீங்களும் கலந்து கொண்டு சங்கல்பிக்கலாம்!
லோக சுபீட்சத்துக்காகவும் வாசகர்களின் குடும்ப நலனுக்காகவும் 13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் ஆவடி ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. ஆலய நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்காத செல்வமும், நிறைந்த ஆரோக்கியமும் நீண்ட வாழ்வும் அருளும் இந்த சந்நிதியில் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.
இந்த விளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டால் ஸ்ரீதேவி கருமாரியம்மன் அருளால் சர்வ மங்கலங்களும் கிடைக்கும் என்பது உறுதி. நாம் மனதில் நினைத்து வேண்டிக்கொண்ட காரியங்கள் நிச்சயம் நிறைவேறும். நம்முடைய மனச் சங்கடங்கள் அனைத்தும் விலகும்; பெண்கள் பூஜையில் அமரலாம். உங்கள் பிள்ளைகளுக்காகவும் குடும்ப உறவுகள், சுற்றம் நட்புகள் நலம்பெற வேண்டிக் கொள்ளலாம்.
திருமண பிரார்த்தனை செய்து கொள்ள விரும்புபவர்கள் வரன்களின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பூஜிக்கலாம்.
13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் ஆவடி ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
எல்லா காரியத்திலும் வெற்றி கிடைக்கவும், சொந்த வீடு அமைய, கல்யாண வரம் கைகூட, கடன் பிரச்னைகள் நீங்கிட, பிள்ளைப் பாக்கியம் கிடைக்க… என சகல பிரார்த்தனைகளை முன்வைத்து நடைபெறவுள்ளது இந்த விளக்குப் பூஜை.
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
விளக்குப் பூஜையில் கவனிக்க வேண்டியவை!
*குழந்தைகளை அழைத்து வரவேண்டாம். குறித்த நேரத்தில் வரவும். மனது ஒன்றி, மற்றவருக்கு தொந்தரவு தராமல் இந்த பூஜையை செய்தல் வேண்டும்.
* விளக்குப் பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல மண், பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பூஜையின்போது, தலை வாழை இலை மீது விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம்.
* விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.
* ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும்.
* கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது குச்சியால் அணைக்கலாம்.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து சுமங்கலிகள் திருமாங்கல்யத்திலும்,தலை உச்சி வகிடுலும் வைத்துக்கொள்ள கணவர் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ்வர்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07