ராமேஸ்வரபட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.
அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் பச்சை மலைத்தொடர்களில் பாய்ந்தோடும் வெள்ளி நீரோடை!
துறைமுகம் கலங்கரை விளக்கம் அருகில் தமிழ்நாடு பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு, கடல் பாய்மர பயணத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
வாய்கால்மேடு பகுதியில் ஏழாவது நாளாகத் தொடரும் கீழ்பவானி பாசன விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம்.
ஒரத்தநாட்டில் தி.மு.க அரசைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கண்டன உரையாற்றினார்.
தி.மு.க அரசைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேடமிட்ட நபர்கள்.
உலக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடக்கிவைத்த தேனி மாவட்ட ஆட்சியர்.
மது அருந்திவிட்டு நேற்று இரண்டு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறை விசாரணை.
தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
புதிய கல்வி ஆண்டில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் தயார் செய்யப்பட்டு வரும் அரசு இலவச சைக்கிள்கள்.
ஏனாதிமங்கலம் கிராம எல்லையில், தென்பெண்ணை ஆற்றில் அமைந்திருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் அஸ்திவார தூண்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால், அதை பராமரிக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.
ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட துணை ஆணையரை மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களை முறையாகப் பணி நிரவல் செய்யக்கோரி விருதுநகர் முதன்மை கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்!
நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து கட்டிய பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட சத்திரரெட்டியாபட்டி பொதுமக்கள்!
Please enter your username or email address, you will receive a link to create a new password via email.