விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் வருகை…
விகடன் குழுமம் நடத்தும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ – 2023’ எனும் பிரமாண்ட வேளாண் கண்காட்சி நேற்று திருச்சியில் துவங்கியது… நேற்றைய நிகழ்வில் விவசாயி மற்றும் திரைக்கலைஞர் கருணாஸ்,
வேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடாவின் உதவிப் பொது மேலாளர் முத்தையா,
வெள்ளாட்டுப்பால் விற்பனையில் மாதம் ரூ.4 லட்சம் லாபம் ஈட்டும் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட விவசாயி ஸ்ரீனிவாஸாச்சார்யா
மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வழிகாட்டினர். அத்துடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், மாணவர்கள், தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சிக்கு காலையில் இருந்து ஆர்வத்துடன் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.