டெல்லியில் பல்வேறு பகுதிகளில் “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டரால் ஒட்டப்பட்டிருந்ததை அடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

டெல்லியில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து டெல்லி காவல்துறை இதில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கைது செய்துள்ளது. டெல்லியில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த 2000 க்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை டெல்லி காவல்துறை அகற்றினர். இதில் பெரும்பாலும் , “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகம் இந்தியில் எழுதப்பட்டிருந்தன. 

image

இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை 6 பேரை கைது செய்துள்ளது. அவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அச்சகத்தின் பெயரை சுவரொட்டிகளில் இடம்பெற செய்யும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இதற்கிடையில், டெல்லியில் வாகன சோதனையின்போது ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் பிடிபட்டது. விசாரணையில் இந்த சுவரொட்டிகள் ஆம் ஆத்மி தலைமையகத்தில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக வாகனத்தின் ஓட்டுனர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்ட வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.