இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நாளை அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை இலவச சிற்றுந்து சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான 37,000 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துள்ள நிலையில் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை இலவச சிற்றுந்து சேவை இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும்வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே இயக்கப்படுகிறது.
22-03-2023, அன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் வாகனநிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக இலவச பேருந்தும், ரயில்களின் இயக்கம் அதிகரிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.