+2 முடித்த மாணவரோ அல்லது இளங்கலை/முதுகலை முடித்த மாணவரோ, மேற்கொண்டு நீங்கள் படிக்க பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது, ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி(AVIT). ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்ந்த இளங்கலை(UG), முதுகலை(PG) மற்றும் பி.எச்டி(Ph.D.) பட்டங்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
தகுதி வாய்ந்த மாணவ மாணவியர்களுக்கு, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசிடமிருந்து தகுதியான மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும் பெற்றுத் தரப்படுகிறது.
இன்டெல் (INTEL) மற்றும் என்.இ.சி (NEC) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு கணினி துறை (CSE), மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை (EEE), மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் (ECE) பொறியியல் இளங்கலை(B.E.) சிறப்பு பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. மிக முக்கியமாக, இப்பாடப் பிரிவுகளின் கீழ்ப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இன்டெர்ன்ஷிப் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடனும் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்(MoU) போடப்பட்டுள்ளன.
1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி(AVIT), இந்த வருடம் 25 ஆவது ஆண்டில் சிறப்பாக அடியெடுத்து வைத்துள்ளது. சென்னை பையனூரில் அமைந்துள்ள AVIT, சேலத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (VMRF) கீழ் இயங்கும் ஓர் உறுப்பு கல்லூரி ஆகும். நிகழ் நிலைப் பல்கலைக்கழகமான VMRF, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தரவரிசையில் ‘A’ Grade பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரியில் (AVIT) அட்மிஷன் நடைபெற்றுவருகிறது.
உடனே பதிவு செய்ய: https://avcampusadmissions.com/avit/2023/landing-page/index.php?utm_source=website&utm_medium=home&utm_campaign=sidebar