பூமியில் உள்ள நீர், சூரியன் உருவாகுவதற்கு முன்பே தோன்றியுள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோள் என்று கருதப்படுவது பூமி மட்டும்தான். சூரியனிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் இருப்பதாலும், தண்ணீர் இருப்பதாலும், வளிமண்டலம் மற்றும் ஓசோன் அடுக்கு உயிர்கள் வாழ்வதற்கேற்ப இருப்பதாலும், பூமியில் உயிரினங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இச்சூழலில் சூரிய குடும்பத்தில் உள்ள நீர், சூரியன் உருவாகுவதற்கு முன்பே தோன்றியுள்ளது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

image

பூமியிலிருந்து 1,305 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள V883 ஓரியோனிஸ் என்ற இளம் நட்சத்திரத்தை சுற்றியுள்ள நீராவிகளை பரிசோதித்ததில், அந்த நீரும் பூமியிலுள்ள நீரும் ஒரே மாதிரியான வேதிப்பொருட்களை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது பூமியிலுள்ள நீர் சூரியனைவிட பழமை வாய்ந்தது என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

V883 ஓரியோனிஸ் என்பது பல பொருள்களால் சூழப்பட்ட வட்டு வடிவிலான இளம் நட்சத்திரம் ஆகும். அந்த வட்டில்தான் தண்ணீர், நீராவி வடிவில் இருப்பதை விஞ்ஞானிகள் சந்தேகத்துக்கு இடமின்றி தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதை கண்டறிய வானியலாளர்கள் பெரிய மில்லி மீட்டர்/சப் மில்லிமீட்டர் வரிசையை (ALMA) பயன்படுத்தினர். அவர்கள் கண்டுபிடித்த நீர் ஒரு ரசாயன கையொப்பத்தைக் கொண்டுள்ளது, இது நட்சத்திரத்தை உருவாக்கும் வாயு மேகங்களிலிருந்து கிரகங்களுக்கு நீரின் பயணத்தை விளக்குகிறது. பூமியில் உள்ள நீர் சூரியனை விட பழமையானது என்ற கருத்தையும் இது ஆதரிக்கிறது.
image

இதுகுறித்து வானியல் ஆராய்ச்சியாளர் பின் கூறுகையில், “நாம் வசிக்கும் சூரிய குடும்பத்தில் உள்ள நீர், சூரியன் உருவாவதற்கு முன்பே தோன்றியுள்ளது என்பதை நாம் இப்போது கண்டுபிடித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.