கேப்டவுனில் இன்று நடைபெற உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரில் காண உள்ளார்.

ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலிய அணி அதே நம்பிக்கையுடன் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற முனைப்புடன் உள்ளது. அதே வேளையில் லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை சந்தித்த இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த நம்பிக்கையுடன் களம் இறங்க உள்ளது.

image

இந்திய அணி இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கேப்டவுனில் இன்று நடைபெற உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேரில் காண உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.