வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நேற்று சர்வதேச வானொலி தினம்.. சிறிய வயதில் மனனம் செய்து படித்தது இன்றும் நினைவில் இருக்கிறது..ரேடியோவைக் கண்டுபிடித்தவர் கக்லீல்மோ மார்கோனி என.. தொலைக்காட்சி நம் வீட்டிற்கு வரும் முன், நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் இந்த வானொலிப் பெட்டி,,, அதிசயம் என்னவென்றால் .. எவ்வளவு ஊடகங்கள் வந்தாலும், இன்றளவிலும் வானொலி அதற்கான பொலிவை இழக்காமல் இருப்பது தான்.
சிறுவயதிலிருந்தே வானொலியுடன் வளர்ந்த வாழ்க்கை நம்மில் பலருக்கும். ஆல் இந்தியா ரேடியோவின் செய்திகள் வாசிப்பது என பிரத்யேகமான குரல் கேட்டவுடன் வானொலி அருகில் நின்று காதைக் கூர்மையாக்கிக் கொண்டு, செய்திகள் பலவற்றை அதிலிருந்து தான் தெரிந்து கொண்டோம்.. ஆகாஷவானியின் ரிங் டோன் இன்றும் நினைவில் வந்துபோகும் ஒன்று.
பள்ளிப் பருவத்தில் கேட்டு ரசித்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் இன்றும் தொடர்ந்து வருவது அற்புதம்.
எத்தனையோ தகவல்களை நமக்கு வானொலி அள்ளித்தெளித்தாலும், வானொலி என்றால் ,.. இசை தான் நமக்கு அதில் பிரதானம்..
அத்தனை வானொலி நிலையங்களும் அதிகாலையில் பக்தியை இசை மூலம் பரப்பி , பின் இனிய திரை இசையை தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரமும் நேயர்களுக்கு வழங்குவதில் சளைப்பதில்லை.
ஆர்ஜே(RJ) க்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
ஒவ்வொரு ஆர்ஜேயும் தனித்தனி திறமைகளுடன் அவர்களின் ஸ்டைலில் நேயர்களைக் கவர்வதில் வல்லமைப் பெற்றவர்கள் தான். ஒருசில ஆர்ஜே க்களின் குரலுக்காகவே அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கிறது..
என்னைப் பொறுத்தவரையில் வானொலி என்பது எப்போதும் என் சமையலறையில், அஞ்சறைப் பெட்டியின் அருகில் இடம் பெற்றிருக்கும் ஒரு முக்கியமான பெட்டி ஆகும். சமையலுக்குத் தேவையான பொருட்கள் இல்லையெனினும் கவலைப்பட மாட்டேன்.. வானொலி கட்டாயம் இருக்கவேண்டும்..இசையைக் கேட்டுக் கொண்டே சமைப்பதில் எனக்கு அலாதி பிரியம்..
காற்றின் அலைவரிசையில் வரும் பாடல்கள் வழியாக.. அதே
காற்றில் எந்தன் கீதமும் கலந்து விடும்…
-Mrs. J. Vinu
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.