வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ராமசாமி ஐயாவுக்கும், சின்னத்தாய் அம்மாளுக்கும் பிறந்த ராசையா தான் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்நாட்டு பிரபலம்.

அட…நம்ம இசைஞானி இளையராஜா ஐயா-வை தான் சொல்கிறேன்.

எத்தனையோ மதிப்புமிக்க ரத்தினங்களை இசைஞானி போகிறபோக்கில் நமக்கு அளித்துள்ளார். இவர் இசை மட்டும் தெரிந்த வெறும் ஞானி அல்ல… சமஸ்கிருதம், உச்சரிப்பு மற்றும் நம்மளுடைய மெல்டிங் பாயின்ட் இப்படி எல்லாம் தெரிந்த இசைவிஞ்ஞானி.

ஆர்மோனியம் இவர் விரல்பட்டு குழையும்.. நெகிழும்..வளையும்.

இதயத்திற்கு நெருக்கமான இசை இவரால் மட்டுமே சாத்தியம்.

துள்ளல் இசை, மென் சோகம் ,ஒரு தலை காதல்,விரகதாபம் உற்சாகம்,நெருக்கம், அந்நியோன்யம், தெய்வீகம்… இப்படி எல்லா வித உணர்வுகளையும்  அவர் இசையில் அதுவும்அவர் இசையில் அவர் பாடிய பாடல்களை கேட்டால் நமக்கு புரியும்.

இளையராஜா

உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

*’ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு

தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக்கூடு

ஆண் குருவிதான் இரையைத் தேடி போயிருந்தது

பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது

வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது

கூட்டுக்குள்ளே குருவி ரெண்டும் ஒண்ணா சேர்ந்தது’… இதயக் கோயிலில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் துள்ளல் இசைகானம். நம்மை அறியாமல் தாளமிட வைக்கும் தனித்தன்மை கொண்டது. கிராமிய பாடல்.. மேற்கத்திய இசைக் கோர்வை ராஜா சாரால்மட்டுமே சாத்தியம்.

‘துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயிலிசை கேட்டு சொல்லி கொடுத்தது காற்று உறவோடுதான்..’

ஒருதலைக் காதலை இதைவிட வேறு ஒரு பாட்டில் சொல்லிவிட முடியுமா?! இசைக்காகவே படைக்கப்பட்ட ஒரு மனித கடவுள் அப்பா இவர். இரவில் இந்த பாடலை கேட்கும்போதுமனதிற்கு தாலாட்டும் உணர்வைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.

‘ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம்

இங்கு கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்’

கீதாஞ்சலி என்ற படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலை யாராவது பிடிக்கவில்லை என்று சொல்வார்களா? ராஜ தேவனின் தாலாட்டு இது!

ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அன்பின் தாலாட்டு போல் இந்த பாடலும் இசையும் இருக்கும். (அன்று முதல் இன்று வரை உன்னை எண்ணியே வாழ்கிறேன்…ஐயா)

இளையராஜா

‘வாட(டை)வாட்டுது

ஒரு போர்வை கேக்குது இது ராத்திரி நேரமடி.. ‘சக்களத்தி என்ற படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடல் ஒரு கணவனின் தவிப்பை/ தாபத்தை அழகாக வெளிகொணர்ந்திருக்கும்.

இரவில் அமைதியாக இந்த பாடலைக் கேட்க மனம் ஏதோ அமைதியாய் நம்மை ஆசிர்வதிப்பது போலிருக்கும்.

‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல!’

எத்தனை பிரச்சினைகள் நம்மை சூறாவளி போல் தாக்கினாலும் இந்தப் பாடலைக் கேட்க மனம் அமைதி நிலையை எட்டும். அட போப்பா… இதெல்லாம் ஒரு பிரச்சனையா ?அப்படின்னு ஜஸ்ட் லைக் தட் நம் வேலையை மகிழ்ச்சியாக பார்க்கவைக்கும் சர்வ வல்லமை பெற்றது.

‘காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை

நம் ராஜ்ஜியம் என்றென்றும் ஆனந்தம் பேரின்பம்’

அலைகள் ஓய்வதில்லை போல நம் நெஞ்சுக்குள் ஞானிபாடிய பாடல்கள் என்றுமே ஓயாது! ஓயாது!

‘சின்னப்பொண்ணு சேல செண்பகப்பூ போல இங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு.’

மலையூர் மம்பட்டியான் இந்தப் பாடலைபாடும்போது கல்லுக்குள் ஈரம் கசிவது தெ(பு)ரியும்.

‘நிலா அது வானத்து மேலே’ இந்த பாடலை புடிக்கலைன்னு சொல்றவங்க யாராவது இருப்பாங்களா? பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய பாடல் அல்லவா இது!

‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ கவிக்குயிலில் அவர் பாடிய பாடலைக் கேட்டுகுயில்கள் எல்லாம் மெய் மறந்தன.

இளையராஜா

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் பட்டையை கிளப்பிய பாடல் மோகன ராகத்தில் பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ பாடல். கண்ணை மூடிய நிலையில் இந்தப் பாடலைக் கேட்க ஆத்மா வெளியில் போய் விட்டு உள்ளே வருவது போல் இருக்கும்.

‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக’ அட அட அட உயிரை உருக்கும் காதலை அவ்வளவு அழகாக தன் குரலின் மூலம் பாடியிருப்பார் இசைஞானி.

‘அடி ஆத்தாடி இள மனசொன்னு றெக்ககட்டி பறக்குது சரிதானா அடி அம்மாடி ஒரு அலைவந்து அடிக்குது மனசுக்குள்ள சரிதானா!’ இந்தப்பாடல் எண்பதுகளின் காதலர்களின் ஃபேவரைட் பாடல். உயிரைஉருக்கும். அமைதியான நிலையில் ஒரு பெரிய மரத்தடியில் …மழைபெய்ய… ராஜா சார் இசையை ரசிப்பதே பெரும் சுகம்.

*”எங்கே செல்லும் எந்தன் பாதை”

சேது படத்தில் பாடியிருப்பதுநாம் நம்மையே கேள்வி கேட்பது போலிருக்கும். கல்லையும் கரைக்க வல்லது இந்த பாடல்.

இளையராஜா

*”நான் தேடும் செவ்வந்திப் பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம்”

தர்மபத்தினி படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில்.. இசையும், குரலும் அமுதும், தேனும் போல் ஒட்டி இருக்கும். ராஜா சார் மனம் லயித்து பாடியிருப்பார் இந்த பாடலை.

‘தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே இன்று என் ஜீவன் தேயுதே என் மனம் ஏனோ சாயுதே’அறுவடை நாளில் வந்த இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும்ஞானியின்ஆலாபனைகுரலுக்காகவே எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றுஎனக்கே தெரியாது.

உங்கள் இசை மட்டுமல்ல… உங்கள் குரலும் எங்களை உள்ளே உள்ளே எங்கோ கூட்டிச் செல்லும் உங்கள் குரலை உணரத்தான் முடியும் .விவரிக்க வார்த்தை இல்லை.

இவ்வளவு பாடல்கள் சொல்லிவிட்டு… ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ… இந்தப் பாடலை சொல்லாமல் விடுவதா!?

“ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் விடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே..”

மனதை மயக்கும் தேனிசை. தெய்வீகம் கமழும் பாடல். மனம் எங்கோ செல்லும் அமைதியைத் தேடி, ஆன்மீகத்தை தேடி.

இசைதாயின் செல்லப்பிள்ளையின் குரலை/பாடலைக் கேட்க மூகாம்பிகைதாயே ஓடி வருவார். தெய்வீக உலகத்திற்கு அழைத்துச்செல்லும் இந்தப் பாடல். மூடிய இமைக்குள் இறைவியை கொண்டு வரும்பெரும்பேறுபெற்றது இந்த பாடல்.

இளையராஜா

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இசைஞானியின் இந்த இசையை எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவன் ஏதோ ஒரு வாத்தியத்தில் வாசித்துக் கொண்டுதான் இருப்பான். அதைக்கேட்டு மானுடம் மட்டுமல்ல மரமும், செடியும் கூட மயங்கி கொண்டுதான் இருக்கும்.

கடவுள் இசையை அவர் உருவத்தில் படைத்திருக்கிறார்.

இதயத்திற்கு நெருக்கமான இசையைத் தரும் நீங்கள் இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் சார் கண்டிப்பாக நன்றாக இருப்பீர்கள்.!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.