ஆஸ்திரேலியாவில் ஹேக்கர் ஒருவர், அந்நாட்டு மக்களின் தரவுகளை எடுத்து, ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார் என ஆஸ்திரேலியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஹேக்கர் ஒருவர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் முழுப்பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார் என அந்நாட்டு அல்பைன் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், “கைது செய்யப்பட்டிருக்கும் ஹேக்கர், கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலிய மக்களின் தரவுகளை விற்பனை செய்துள்ளார்.

image

அதில், அவர் விற்பனை செய்த தரவுகள் அனைத்தும் சரியாக உள்ளன. இந்த தரவுகள் ஆஸ்திரேலியாவின் 9 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டதாக இருக்கிறது. அந்த நபர், இத்தகைய தரவுகளை இத்தாலி, நெதர்லாந்து, கொலம்பியா ஆகிய நாடுகளில் விற்பனை செய்துள்ளார். இந்தத் தரவுகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கப் பெற்றதால், அதன்மூலம் கிரிமினல்கள் பலர் மிரட்டி பணம் பெற்றுள்ளனர்” என ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

அத்தகைய தரவுகள், ஆஸ்திரேலிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், தங்கள் இருப்பிடம் குறித்த தகவல்களை காவல் துறையினருக்குத் தந்த பட்டியல் எனச் சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டிருக்கும் அந்த நபர் சர்வதேச குற்றவாளி எனவும், அவர் ஏற்கெனவே நெதர்லாந்து போலீசாரிடம் சிக்கி விசாரணை செய்யப்பட்டிருக்கிறார் எனவும் ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.