ஆறு தசாப்தங்களாக இந்தியாவின் மிகச்சிறந்த நகைகளை வடிவமைத்த ஜி.ஆர்.டி நிறுவனம் தற்போது கைவினைத்திற்கு ஒரு மதிப்பைமிக்க நிலையை அதாவது ஒரு மைல்கல்லை உருவாக்கி வைத்துள்ளது. இது ஒரு விலைமதிக்க முடியாத சிறந்த பயணம். இதன் மூலம் நம்பிக்கையையும் தரத்தையும் சம்பாதிதுள்ளது ஜி.ஆர்.டி. இப்போது அதன் அடுத்த கட்டமாக மதிப்புமிக்க ஐ.ஜே விருதுகளில் சிறந்த வளையல் வடிவமைப்புகளின் வெற்றியாளராக, ஜி.ஆர்.டி மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
12வது ஐஜேவிருதுகள் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 21 நகரங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வில் விருதை வென்றது, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்க்கு இன்னுமொரு மகுடத்தை சூட்டியது போன்றது. இந்தச் சிறப்பு நிகழ்வில் பேசிய GRT-யின் நிர்வாக இயக்குநர் திரு. ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன், “தொடக்க காலத்தில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கைவினைத்திறன் மற்றும் ஒப்பிடமுடியாத வடிவமைப்பு யோசனைகளைக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தது. இப்போது பெற்றிருக்கும் இந்த விருது அந்த உழைப்பில் பலனேயாகும்” என்றார். மேலும், ஜிஆர்டியின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் பேசுகையில், “உங்கள் கைவினைப்பொருளுக்கு உண்மையாக இருக்கும் உங்கள் விடாமுயற்சியுடன் இருக்கும்போது நம் கனவுகள் நனவாகும். அதன் வெளிபாடுதான் இந்த விருது. இதற்காக நான் GRT இல் பணிபுரியும் ஊழியர் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் இந்த மைல் கல் சாதனைக்காக அவர்களை வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.