பீகாரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கரைப் போலவே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக் யாதவ் மற்றும் அவரது மனைவி நீலம் தேவி (40). இவர்கள் பாகல்பூரில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று நீலம் தேவி தனது மகனுடன் பக்கத்தில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்கச் சென்று உள்ளார். அப்போது அங்கு ஷகீல் தனது சகோதரர் முகமது ஜூதினுடன் அங்கு வந்து உள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் ஷகீல் என்பவர் தனது சகோதரருடன் சேர்ந்து கூட்டம் நிறைந்த சந்தையில் அனைவரது முன்னிலையிலும் நீலம் தேவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஷகீல், அந்த பெண்ணின் மார்பை சிக்கன் வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். அதன் பிறகு, அவரது இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் இரண்டு காதுகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதைக் கண்ட அங்கிருந்த சிலர் சத்தம் போடவே அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

image

இதையடுத்து நீலம் தேவி பலத்த காயங்களுடன் மாயாகஞ்சில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், அந்த பெண் இறப்பதற்கு சிறிதுநேரத்திற்கு முன் தன்னை தாக்கியவரின் பெயரை போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கொலையாளிகளில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர். கொலையாளி ஷகீல் சிக்கன் வெட்டும் கத்தியால் நீலம் தேவியின் உடலுறுப்புகளை வெட்டியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.

தவற விடாதீர்: ’தன்னை போலீசாகவே நினைத்தார்.. போலீசாகவே வாழ்ந்தார்’ – எஸ்.ஐ வேடமிட்டு வலம்வந்த நபர் கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.