கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்த ஆண்டு கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. இத்தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. 64 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. நவம்பர் 20 அன்று தொடக்க ஆட்டத்தில் கத்தார் – ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற சாதனையை தக்க வைத்துள்ள பிரேசில், 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
கோல்கீப்பர்: எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), அலிசன் பெக்கர் (லிவர்பூல்), வெவர்டன் (பால்மீராஸ்)
டிஃபென்டர்: தியாகோ சில்வா (செல்சியா), மார்க்வினோஸ் (பிஎஸ்ஜி), எடர் மிலிடாவோ (ரியல் மாட்ரிட்), அலெக்ஸ் டெல்லெஸ் (செவில்லா), அலெக்ஸ் சாண்ட்ரோ (ஜுவென்டஸ்), பிரேமர் (ஜுவென்டஸ்), டானி ஆல்வ்ஸ் (பூமா), டானிலோ (ஜுவென்டஸ்)
மிட்ஃபீல்டர்கள்: காசெமிரோ (மான்செஸ்டர் யுனைடெட்), லூகாஸ் பக்வெட்டா (வெஸ்ட் ஹாம்), ஃபேபின்ஹோ (லிவர்பூல்), ஃப்ரெட் (மான்செஸ்டர் யுனைடெட்), எவர்டன் ரிபெய்ரோ (ஃபிளமெங்கோ), புருனோ குய்மரேஸ் (நியூகேஸில்)
ஃபார்வர்ட்ஸ்: நெய்மர் (பிஎஸ்ஜி), ரிச்சர்லிசன் (டோட்டன்ஹாம்), வினிசியஸ் ஜூனியர் (ரியல் மாட்ரிட்), ஆண்டனி (மான்செஸ்டர் யுனைடெட்), ரபின்ஹா பார்சிலோனா), ரோட்ரிகோ (ரியல் மாட்ரிட்), பெட்ரோ (ஃபிளமெங்கோ) , கேப்ரியல் ஜீசஸ் (ஆர்சனல்), கேப்ரியல் மார்டினெல்லி (ஆர்சனல்)
இதேபோல் உலகக்கோப்பை போட்டிக்காக 26 வீரர்கள் கொண்ட அணியை பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய அணிகளும் அறிவித்துள்ளன. கடைசியாக ரஷியாவில் நடைபெற்ற 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த தொடரில் பிரேசில் அணி காலிறுதி சுற்றுடன் வெளியேறியது.
இதையும் படிக்கலாமே: சானியா மிர்சா – சோயிப் மாலிக் உறவில் விரிசல்? – உறுதிப்படுத்தும் இன்ஸ்டாகிராம் பதிவு