ராகுல் டிராவிட், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விமானத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்காக விட்டுக் கொடுத்தனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. சிட்னியில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து –  பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை மறுதினம் அடிலெய்டில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.  

image

இப்போட்டிக்கு தயாராவதற்கு இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, அடிலெய்டில் நடக்கும் அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர்கள் விமானத்தில் பயணம் செய்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்காக விட்டுக் கொடுத்தனர்.

ஐசிசி விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அணிக்கும் நான்கு பிசினஸ் கிளாஸ் சீட்கள் கிடைக்கும். பெரும்பாலான அணிகள் இந்த சலுகையை தங்கள் பயிற்சியாளர், கேப்டன், துணை கேப்டன், முன்னாள் கேப்டன் அல்லது மூத்த வீரர் ஆகியோருக்கு வழங்குகின்றன. இந்த நிலையில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை கொடுத்துள்ளனர்.

image

மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான பயண நேரம் ஒன்றரை மணி நேரமாகும். இந்த பயண நேரத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் கால் வலி மற்றும் முகுது வலியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே பிசினஸ் கிளாஸ் சீட்டுகளில் அமரும்போது கால்களை நீட்டி வசதியாக அமர அவர்களுக்கு போதுமான இடம் கிடைக்கும் என்று இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர்  கூறினார்.

இதையும் படிக்கலாமே: ‘அஸ்வின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை’ – கபில் தேவ் தாக்கு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.