டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (3.58 லட்சம் கோடி ரூபாய்) வாங்க இருப்பது
உறுதியாகியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை 3.34 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை.

ட்விட்டரில் போலி கணக்குகள் இல்லை என்பதை நிரூபிக்காததால் அதனை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முன் வந்திருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதனை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.

image

ஆகவே ட்விட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் கூறியிருப்பதாக ப்ளூம்பெர்க் , ராய்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் செய்திகள் மூலம் அறியப்படுகிறது. இதனையடுத்து ட்விட்டரின் பெரும்பாலான பங்குகள் எலான் மஸ்க்கிடம் செல்லவிருக்கிறது.

இந்த முடிவு ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்கிற்கும் இடையேயான சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.