பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 1,695 பேர் இறந்துள்ளதாகவும், 12,865 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட விரிவான அறிக்கையில், அக்டோபர் 2- ஆம் தேதி கணக்கீட்டின்படி, 5 மாகாணங்களில் உள்ள 81 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 35 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானதாகவும், சுமார் 10 லட்சம் கால்நடைகள் இறந்துபோனதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/anY0-Dl1_-c” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
இதையும் படிக்க: ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ! யார் இவர்? எதற்காக நோபல் பரிசு?